காலி சிறைச்சாலையில் கைதி தற்கொலை
காலி சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் நேற்றிரவு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறையில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
மெட்டிவல தெல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான கைதியே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இவர் சிறைச்சாலையில் தனியான சிறையறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் சரத்தின் பட்டியை (லுங்கி) பயன்படுத்தி சிறையறைக்குள் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள், கைதியை மீட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கொள்ளை, போதைப் பொருள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த இந்த கைதிக்கு எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam