அதிபர், ஆசிரியர்கள் முரண்பாட்டை தீர்க்க கோரி ஆர்ப்பாட்டம்
நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்கந்தவத்த தமிழ் வித்தியாலய மாணவர்கள் அதிபர்,ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்
குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று(02) பாடசாலையின் மாணவர்களின் பெற்றோர்களும் கற்பிக்கின்ற ஆசிரியர்களும் அதிபரும் இணைந்து இரண்டு மணிக்கு பிறகு மாணவர் கல்வியை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினை
இதன்போது கையில் பதாகைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு இருந்தனர்.
அதேவேளை கடந்த காலங்களில் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு இவ் அரசு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் இவர்களின் சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
மேலும், மாணவர்களின் கல்வியை பாதுகாக்குமாறு கோரியும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |