உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆராயுமாறு பிரதமர் அறிவுறுத்தல்
உணவுப் பொருட்களின் தரம் குறித்து தொடர்ச்சியாக ஆராயப்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வர்த்தக அமைச்சிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
உணவுப் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் தரமான பொருட்கள் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தட்டுப்பாடு இன்றி பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கும் பொறுப்பு வர்த்தக அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நச்சுப் பொருட்கள் அற்ற உணவுக் கலாச்சாரமொன்றை உருவாக்கவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.