விமல் மற்றும் பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பை ஏற்ற பிரதமர்
அமைச்சர் விமல் வீரவங்சவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு ஆதரவான பிக்குமார் மற்றும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில கட்சித் தலைவர்கள் பிரதமரிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து அவர் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் விமல் வீரவங்ச கடந்த வாரம் சிங்கள வாரப் பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தலைமை பொறுப்பை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இதனையடுத்தே பொதுஜன பெரமுனவிற்கும் அவருக்கும் இடையில் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.