அவசர காலச்சட்டம் போராட்டக்காரர்களுக்கு எதிரானதல்ல! தினேஷ் குணவர்த்தன
போராட்டக்காரர்களை அடக்கும் நோக்கில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தினேஷ் குணவர்த்தன பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பின் முதன்முறையாக நேற்றைய தினம் அவரது தந்தையார் பிலிப் குணவர்த்தனவின் சமாதிக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப கவனம்

கொஸ்கம, பொரளுகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பிலிப் குணவர்த்தனவின் சமாதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து வௌியிட்ட தினேஷ் குணவர்த்தன,
இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும்.
அதன் மூலமாக மட்டுமே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப முடியும்.
அதற்காகவே அரசாங்கம் தற்போதைக்கு அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் முடிவை மேற்கொண்டது.
மற்றபடி போராட்டக்காரர்களை அடக்கும் நோக்கில் அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் தினேஷ் குணவர்த்தன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam