லண்டன் சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி - ஹீத்ரோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயமாக லண்டனைச் சென்றடைந்தார்.
அவர் இலங்கை நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
லண்டன் பயணம்
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர, பிரித்தானிய பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியும் முன்னாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகருமான ரிச்சர்ட் வைல்டாஷ் உள்ளிட்ட இராஜதந்திரிகள் பிரதமரை வரவேற்றனர்.

43 ஆவது பொதுநலவாய திறந்த கற்றல் நிறுவனத்தின் நிர்வாகச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
இதேவேளை கல்வி, அபிவிருத்திக் கற்கை, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மை ஆகியவற்றைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட கல்விசார் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளையும் அவர் மேற்கொள்ளவுள்ளார்.


மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam