பொதுமக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பவே அவசர காலச்சட்டம்: போராட்டக்காரர்களுக்கு எதிரானதல்ல -செயதிகளின் தொகுப்பு
போராட்டக்காரர்களை அடக்கும் நோக்கில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பிரதமர் தினேஷ் குணவர்த்தன,
இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும். அதன் மூலமாக மட்டுமே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப முடியும்.
அதற்காகவே அரசாங்கம் தற்போதைக்கு அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் முடிவை மேற்கொண்டது.
மற்றபடி போராட்டக்காரர்களை அடக்கும் நோக்கில் அவசர காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் தினேஷ் குணவர்த்தன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செயதிகளின் தொகுப்பு,