அநுர அரசில் தலைகீழாக மாறும் இலங்கை! வறுமைக்கு எதிராக போராடும் நிலையில் மக்கள்
சமகால அநுர அரசாங்கம் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை ஸ்திரப்படுத்தி வருவதாக பகிரங்கமாக தெரிவித்து வந்தாலும் கூட, நாடு அதல பாதாளத்தை நோக்கில் நகர்வதாகவே அண்மைக்கால செயற்பாடுகள் அமைந்துள்ளன.
அதற்கமைய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மீதான மாற்று விகித அழுத்தம் மேலும் தீவிரமடைந்து வருவதால், அதன் மதிப்பு நாளுக்கு நாள் அதிவேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
இதன் காரணமாக, எரிபொருள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விலைவாசி அழுத்தம்
இதனால் வரும் காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் விலைவாசி அழுத்தம் மேலும் மோசமடைந்து நாட்டின் வறுமை நிலை அதிகரிக்கும் என பொருளாதார மற்றும் நிதி வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 331.15 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்று திங்கட்கிழமை 334.26 ரூபாயாக கணிசமாக உயர்ந்து ரூபாயின் மதிப்பில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய, நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்க டொலரின் விற்பனை மதிப்பு 3.11 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி அன்று டொலரின் விற்பனை விலை 334.22 ரூபாயாக பதிவாகியிருந்த நிலையில், அதன்பின்னர் பதிவான மிக உயர்ந்த டொலர் விற்பனை விலை இதுவாகும். அதேபோல, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலையும் நேற்று 326.74 ரூபாயாக உயர்ந்தது.
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகித மதிப்புகளில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அடிக்கடி ஏற்படும் கடுமையான பொருளாதார அதிர்ச்சிகள் காரணமாக, நாடு தற்போது அதிகப்படியான பொருளாதார நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
இத்தகைய கடுமையான பொருளாதார நெருக்கடிகளால் ஏற்படும் நிச்சயமற்ற நிலை, குடும்பங்களின் நுகர்வு மற்றும் சேமிப்பு முடிவுகளையும், வணிகங்களின் உற்பத்தி மற்றும் முதலீட்டு முடிவுகளையும் பாதித்து, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சித் திறனை முடக்குவதாக மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான புதிய பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், இலங்கை பொருளாதாரம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய ரீதியில் அடிக்கடி கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்த நெருக்கடிகள் சில இயற்கை பேரிடர்களால் ஏற்பட்டவை என்றாலும், மற்றவை உள்நாட்டு மற்றும் உலகளாவிய மனித செயல்பாடுகளால் உருவானவை என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri