சஜித் - அனுரவை ஜனாதிபதி ஆக்குவதில் முக்கிய நாடு கலக்கத்தில்..!
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசவை தெரிவு செய்வதில் இந்தியா குழப்ப நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவிற்கு உள்ளூர் ரீதியாக ஆதரவு இல்லாத பட்சத்தில் இந்தியா இரண்டாவது தெரிவாக சஜித் பிரேமதாசவை விரும்பக்கூடும்.
எனினும் சஜித் பெருமளவில் இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ளாத போதும் அவருடைய தந்தை ரணசிங்க பிரேமதாச இந்தியாவுக்கு எதிரான பாரிய எதிர்ப்புவாதியாக இருந்துள்ளார். ஆகவே சஜித்தை ஜனாதிபதி ஆக்குவதில் பாரிய சிக்கல் தன்மை காணப்படுகின்றது.
இந்நிலையில், அநுரகுமார திசாநாயக்க இந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற விம்பம் பொதுசன அபிப்பிராயங்கள் மூலம் கடந்த காலங்களில் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த விடயங்கள் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளை சற்று யோசிக்க வைத்தது. இதன் காரணமாகவே மேற்குலக நாடுகள் அநுர குமாரவுக்கான வெளிநாட்டு அழைப்புக்களை கடந்த மூன்று மாதங்களுக்கு முதல் மேற்கொண்டிருந்தன.
எனினும் கடந்த சில காலங்களில் அதற்கான தேவை அவசியமற்றது என்பதை அந்நாடுகள் விளங்கிக் கொண்டன. எனினும் தேர்தல் பிரசாரங்களில் ஜேவிபியினர் உடனான கூட்டங்களில் அதிகளவானோர் இடம்பெற்றிருந்தாலும் அவை வாக்குகளாக மாறிவிட முடியும் எனவும் கூற இயலாது.
ஆகவே, தேர்தல் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், அமெரிக்காவின் சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் பல விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam