ஜனாதிபதி தேர்தல் இழுத்தடிப்புக்கு ரணிலே காரணம்: சஜித் தரப்பு குற்றச்சாட்டு
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா? இல்லையா ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் தோன்றியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மற்றும் அவரைச் சுற்றியுள்ள நபர்களின் செயற்பாடே இந்த சந்தேகம் எழுவதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பாக உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற விவாதம் நடந்தபோது, இந்த மனு நீட்டிப்பாக நீதிமன்றத்துக்கு வந்தது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம்
இதுதான் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம். ஆனால் அந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை நம்பவைக்கும் ஒரு பெரிய நடவடிக்கை நடக்கிறது.
மேலும், பிரச்சினை எந்த பக்கம் வந்தாலும் அதை விட்டு வெளியேற ஜனாதிபதி முயற்சிக்கிறார்" என முஜுபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri