ஜனாதிபதித் தேர்தலையொட்டி மொட்டுக்குள் வெடித்தது மோதல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமது கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
மொட்டுக் கட்சி உறுப்பினர் ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடாகும்.
மேலும், தனிப்பட்ட நபர்கள் வெளியிடும் கருத்துகள் கட்சியின் நிலைப்பாடு அல்ல எனவும் சாகர குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல்
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான செஹான் சேமசிங்க விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மொட்டுக் கட்சி செயலாளர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், மொட்டுக் கட்சியினர் அமைச்சுப் பதவி கேட்டு அலையப் போவதில்லை என குறிப்பிட்டார்.
எனினும், அமைச்சுப் பதவி கிடைக்காததால் மாவட்ட தலைவர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர் எனவும் சாகர காரியவசம் இதன்போது தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 5 மணி நேரம் முன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam
