நிலக்கரி மோசடி தொடர்பில் தீவிரப்படுத்தப்படும் விசாரணை - ஜனாதிபதியின் முதற்கட்ட நகர்வு
2009 ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நிலக்கரி இறக்குமதி தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழு கொழும்பு 12, நீதிமன்ற மாவத்தை, சாஞ்சி ஆராச்சி வத்தை, நீதிமன்ற பியச, நீதவான் நீதிமன்ற வளாகத்தின் 5 ஆம் மாடியில் நிறுவப்பட்டுள்ளது.
விசேட ஆணைக்குழு நியமனம்
இதற்கமைய, இந்த விடயம் தொடர்பாக பொதுமக்களிடமோ அல்லது நிறுவனங்களிடமோ உள்ள தகவல்களை மே மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரை நிலக்கரி இறக்குமதி செய்தமை, அந்த நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தமை மற்றும் அது தொடர்பான ஏனைய அனைத்து செயற்பாடுகளிலும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam