காணாமல் போனோர் அலுவலகத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜயம்
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினுடைய தலைவர் கௌசல்யா நவரத்தினம் விஜயம் செய்துள்ளார்.
குறித்த விஜயம் நேற்று (06.08.2023) இடம்றெ்றுள்ளது.
இதன் போது குறித்த அலுவலகத்தில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பிலும் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டு்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்தவின் அழைப்பின் பேரில் குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
அலுவலகத்தின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த,காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி சிரேஷ்ட சட்டத்தரணி தற்பரன், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் யாழ் பிராந்திய இணைப்பாளர் செல்வகுமார்,ஜனாதிபதியின் மேலதிக இணைப்பாளர் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
