முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினையை பேசுவதற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும்: எம் எஸ் தௌபீக்
இலங்கையின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் (11.04.2023) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த 25, 30 வருடங்களாக பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் நிரந்தர தீர்வை பெறவேண்டும் என்ற நிலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றது.அதேபோன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதி கவனத்திற்கொள்ளவேண்டும்.
இழக்கப்பட்டுள்ள உடமைகள்
கடந்த காலங்களில் தமிழ் சமூகம் பாதிக்கப்பட்டது போல முஸ்லிம் சமூகமும் காணிகள் மற்றும் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டிருக்கிறோம்.தற்போது நாங்கள் ஒரு சில சிறிய சலுகைகளை பெறுவதற்குகூட போராட வேண்டிய நிலை காணப்படுகின்றது.
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளுடனும், தலைவர்களுடனும் பேசி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி முயற்சிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
