கஞ்சா வளர்ப்பு தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனை! டயானா கமகே வரவேற்பு
இலங்கையில் கஞ்சாவை வளர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
“இந்த மருத்துவ மூலிகையின் மதிப்பை ஜனாதிபதி உணர்ந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பல வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழில் இது. அதனால் தான் நான் அதை விளம்பரப்படுத்தினேன்.

பெறுமதியான முதலீடு
அடுத்த வருடம் கஞ்சா தோட்டம் மூலம் இரண்டு பில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான முதலீடுகளை கொண்டு வர நான் எதிர்பார்க்கிறேன்” என கமகே கூறியுள்ளார்.

தாமே இந்த முன்மொழிவை சில காலத்திற்கு முன் மேற்கொண்டதாக என்று அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
டயானா கமகே மீது சுமத்தப்பட்டுள்ள இரட்டைக் குடியுரிமைப் பிரச்சினையின்
காரணமாக, இந்த நாட்டிற்குக் கொண்டு வருவதாக உறுதியளித்த முதலீடுகளை
நிறைவேற்றும் போது, நாடாளுமன்றத்தில் நீடிக்க முடியுமா? என்ற கேள்விக்கு,
பதில் அளித்த அவர், இரட்டைக் குடியுரிமை பற்றி நான் இப்போது பேச
விரும்பவில்லை, ஏனெனில் விடயம் நீதித்துறையின் கைகளில் உள்ளது என்று
தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam