நாடாளுமன்ற பிரதானிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள முக்கிய பணிப்புரை
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இவ்வருட நிகழ்வில் வணக்கம் செலுத்துதல் மற்றும் வாகன அணிவகுப்பு இடம்பெறாது எனவும்நாடாளுமன்ற பிரதானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அரசியலமைப்பின் 33 (2) பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதற்கு முன்னதாக ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam