திடீரென வெளிநாடு புறப்பட்டுச் சென்ற கோட்டாபய - பிரதமர் மகிந்த வசமாகும் பொறுப்புக்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக சிங்கப்பூர் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரில் சில தினங்கள் அவர் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று காலை சிங்கப்பூர் சென்ற குழுவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முதல் பெண்மணி மற்றும் மூவர் அங்கம் வகித்தாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் பயணத் திட்டம் மற்றும் பயணத்தின் நோக்கம் குறித்து தகவல்களை வெளியிட முடியாது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
இதேவேளை, ஜனாதிபதி நாடு திரும்பும்வரை அவரின் பொறுப்புக்களை பிரதமர் கவனிக்கவுள்ளார் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam