போராட்டக்காரர்களை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Economic Crisis Galle Face Green Protest
By Murali Aug 05, 2022 06:13 PM GMT
Report

போராட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்படத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் காலி முகத்திடல் போராட்டத்தின் பல தரப்பினருக்கும் இடையில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

தற்போது நாம் பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதை உண்மைகளுடன் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தப் பொருளாதாரப் போராட்டத்தின் வெற்றிக்கு போராட்டக் களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளும் சகல வழிகளிலும் பங்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களை சந்தித்தார் ஜனாதிபதி  ரணில் | President Ranil Met The Protesters

நான்  வன்முறைக்கும் எதிரானவன்

தாம் ஜனநாயகமற்ற அரசியலுக்கும் வன்முறைக்கும் எதிரானவன் என்றும், அடக்குமுறைக்காக செயற்படும் மக்கள் புதியதொரு நிலையை நிறுத்தி நல்ல சமூக ஜனநாயகத்தை பல்கலைக்கழக செயற்பாட்டின் ஊடாகவே முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியுள்ளார்.

"இன்று நமது பல்கலைக்கழக அமைப்பு வீழ்ச்சியடைந்து வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கொடுமைப்படுத்துதல். வேலைநிறுத்தங்கள் எப்போதும் உண்டு. வேலைநிறுத்தங்களால் மட்டும் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது" என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் மத்தியஸ்த நிலைக்கு வந்து கோரிக்கைகளை வென்றெடுப்பதுடன் நாட்டுக்கான பணிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து போராட்டக்காரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறு கூறிய ஜனாதிபதி, அந்த குழுவிற்கு அனைத்து மதங்களின் பிரதிநிதித்துவமும் பெண்களின் பிரதிநிதித்துவமும் இன்றியமையாதது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

போராட்டக்காரர்களை சந்தித்தார் ஜனாதிபதி  ரணில் | President Ranil Met The Protesters

ஜனாதிபதியை சந்தித்தார் சம்பிக்க ரணவக்க

இதேவேளை, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இன்று (05) இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பின் பிரகாரம் இவர்கள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இன்று பிற்பகல் 03 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

அவர்கள் அனைவரும் தனித்தனியாக தனி வாகனங்களில் வராமல், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து ஜனாதிபதி அலுவலகம் வரை பேருந்தில் வந்திருந்தனர்.

ஏறக்குறைய 02 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பேருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்குத் திரும்பிச் சென்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில்  இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாடலி சம்பிக்க ரணவக்க அவர்களும் இன்று பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்து அனைத்து கட்சி வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடினார்.


2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US