ஜனாதிபதி ரணிலுக்கு மக்கள் ஆசிர்வாதம் இல்லை - ராஜித சேனாரத்ன
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் கொண்டு வரும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கும் நோக்கில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான மக்களின் ஆசிர்வாதம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கும் போது, அதன் வேர் மக்கள் சார்புடையதாக இருக்க வேண்டும், அந்த வேர் மக்கள் விரோதமாக இருந்தால், அதில் சேரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் விரோதிகளாவர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 9 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam