ஜனாதிபதி ரணிலுக்கு மக்கள் ஆசிர்வாதம் இல்லை - ராஜித சேனாரத்ன
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் கொண்டு வரும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கும் நோக்கில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான மக்களின் ஆசிர்வாதம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கும் போது, அதன் வேர் மக்கள் சார்புடையதாக இருக்க வேண்டும், அந்த வேர் மக்கள் விரோதமாக இருந்தால், அதில் சேரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் விரோதிகளாவர்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam