அதி முக்கிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி தீவிர ஆலோசனை

Colombo Ranil Wickremesinghe Ministry of Defense Sri Lanka
By Steephen Sep 27, 2022 12:44 PM GMT
Report

கொழும்பு நகரில் முக்கியமான சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் என அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலர் வழங்கிய முன்வைத்த விடயங்கள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

வர்த்தமானி அறிவித்தலால் வர்த்தக செயற்பாடுகளுக்கு கடும் அழுத்தங்கள்

அதி முக்கிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி தீவிர ஆலோசனை | President Preparing Remove High Security Zones

எனினும் இந்த வர்த்தமானி அறிவித்தல் காரணமாக கொழும்பு நகரின் கேந்திர பொருளாதார வலயத்திற்குள் வர்த்தக செயற்பாடுகளுக்கு கடும அழுத்தங்கள் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் குழு ஒன்று ஜனாதிபதியிடம் விரிவாக விடயங்களை விளக்கி கூறியுள்ளது.

கொழும்பு நகரில் அவ்வப்போது நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பொருளாதார ரீதியாக ஏற்படும் பாதிப்பு மிகப் பெரியது எனவும் எனினும் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் வேறு சிக்கல்கள் ஏற்படக்கூடும் எனவும அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி நாடு திரும்பியதும் பாதுகாப்பு வலயங்களை இரத்துச் செய்யும் வர்த்தமானி வெளியாகலாம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க-President Ranil wickramesinghe

எவ்வாறாயினும் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டுமாயின் ஜனாதிபதியே கையெழுத்திட வேண்டும். இதனால், ஜனாதிபதி ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர், அதனை மேற்கொள்ள உள்ளதாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி,ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை,பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை,உயர் நீதிமன்றம் உட்பட நீதிமன்ற வளாகம்,கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம்,சட்டமா அதிபர் திணைக்களம்,இராணுவத் தலைமையகம்,விமானப்படைத் தலைமையகம்,கடற்படைத் தலைமையகம்,பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் அலுவலகங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

May you like this Video


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US