முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரி எடுத்த விபரீத முடிவு! அறையில் சிக்கியுள்ள முக்கிய ஆவணம்
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெயாங்கொடை - பட்டலகெதரவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதான சமிந்த ராஜகருணா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விசாரணை தீவிரம்
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவரது கையெழுத்தில் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிறிய ஆவணம் ஒன்றும் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த பொலிஸ் அதிகாரி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
