போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்! யாழில் பதற்றம் (Video)
யாழில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் மீதே இவ்வாறு நீர்த்தாரை பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதி வழிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டம் இன்று (15.01.2023) யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினாலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு வாழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (13.01.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த அமைதி வழிப் போராட்டத்துக்கான அழைப்பை மாணவர் ஒன்றியம் விடுத்திருந்தது.
இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan