ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு! நாடாளுமன்றில் இன்று அறிவிப்பு
ஜனாதிபதியின் உத்தரவு
சுகாதார பொருட்களுக்கான வரியை குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடயத்தை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி
இதேவேளை சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறவீட்டுச் சட்டமூலத்தில் நேற்று (20.09.2022) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றத்தில் இன்று (21.09.2022) அறிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலம் கடந்த 08ஆம் திகதி மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி வருடமொன்றில் 120 மில்லியன் ரூபாவிற்கு அதிகமாக இலாபம் பெறும் இறக்குமதியாளர், உற்பத்தியாளர், சேவை வழங்குநர்கள், மற்றும் மொத்த விற்பனையார் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் மொத்த விற்பனை வரவின்மீது 2.5 வீதம் வரியாக விதிக்கப்படும்.
மேலும், 2022ஆம் ஆண்டு 25ஆம் இலக்க சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டம் இன்று (21.09.2022) முதல் நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam