இந்தியா வழங்கிய ஊசி மருந்துகளை உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்ட ஜனாதிபதி
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ராசேனகா - கேவிஷீல்ட் ஊசி மருந்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.
இந்தியா வழங்கிய ஊசி மருந்துகள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
அதனை பெற்றுக் கொள்ள ஜனாதிபதி விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
ஊசி மருந்து தொகையை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்ட பின்னர், அவற்றை குளிரூட்டி சாதனங்கள் அடங்கிய வாகனங்களில் ஏற்றப்பட்டு, சுகாதார அமைச்சிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.