ரஷ்யாவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையை தொடங்கியுள்ள ரஷ்யா, அவரை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலிலும் சேர்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய உள்விவகார அமைச்சகத்தின் தரவுத்தளமே ஜெலன்ஸ்கியை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் பிடியாணை
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது செய்யப்படும் நிலையில் இருப்பவர் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சரகம் பதிலளித்துள்ளது.

மேலும், ரஷ்ய சர்வாதிகாரி விளாடிமிர் புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை நடைமுறையில் இருப்பதை அந்த நாடு நினைவில் கொள்ள வேண்டும் என்று உக்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.
இது மட்டுமின்றி, உலகில் 123 நாடுகள் விளாடிமிர் புடினை(Vladimir Putin)கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கும் அதிகாரம் கொண்டவை என்றும் உக்ரைன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா தற்போது பெரும் விரக்தியில் இருப்பதாலையே, இதுபோன்ற செயல்களில் கவனம் செலுத்துவதாகவும் உக்ரைன் விமர்சித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam