பிரித்தானிய இளவரசரின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல்!
பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் மறைவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரங்கல் வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் துணைவர் பிலிப் இளவரசர் தனது 99 வயதில் இன்று இயற்கை எய்தினார் என பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது.
இளவரசர் பிலிப்பின் மறைவிற்காக மகாராணி எலிசபெத் மற்றும் அரசு குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இராணுவத்திலும், சமூக சேவைகளிலும் இளவரசர் பிலிப் ஆற்றிய அளப்பரிய தொண்டு என்றென்றும் நினைவு கூறப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
I would like to extend my deepest condolences to HM Queen Elizabeth & Royal Family & the people of the #UnitedKingdom on the demise of Prince Philip, Duke of Edinburgh.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) April 9, 2021
His eminent career in the military & community service will be always remembered
May his soul rest in peace pic.twitter.com/pszuX4shNZ