ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க முடியும்! - ஷெஹான் சேமசிங்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க முடியும் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். இதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் எட்டரை ஆண்டுகள் இந்த நிலையில் இருக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ஷ இருப்பார் என்று பரவலாக கருத்து வெளியிடப்பட்டு வரும் கருத்துக்களைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து தற்போது கொழும்பு அரசியலில் பரவலாக பேசப்படுகின்றது. குறிப்பாக பசில் ராஜபக்ஷ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்துத் தகுதிகளும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கே இருப்பதாக ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க முடியும் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 22 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri