ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதா இல்லையா..! விஜயதாச ராஜபக்ச கூறியுள்ள விடயம்
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான மக்கள் இது தொடர்பில் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகா சங்கத்தினரும் ஏனைய சமயத் தலைவர்களும் கூட என்னிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதனால், அது தொடர்பில் மேலும் சிந்தித்து முடிவெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |