சபையில் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய ஜனாதிபதி
எதிர்க்கட்சிகள் வேறு ஒரு அரசியல் வியூகத்தை ஏற்பத்திக் கொண்டு அரசியலில் ஈடுபடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில்(07.08.2025) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உலகில் ஏற்பட்ட பல யுத்தங்கள் மற்றும் இதர பிரச்சினைகளில் இலங்கையின் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டு அரசாங்கம் கலைக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கனவு கண்டனர்.
மின் கட்டணம்
பல பொய்யான தரவுகளை வைத்து பல பேட்டி நிகழ்ச்சிகளில் சில நாட்களில் அரசு உடைந்து விடும் என்றனர். அத்தோடு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிக்கு முகம் கொடுக்க முடியாமல் போகலாம் என்றனர்.
இவ்வாறான குரூர சிந்தனைகளில் எதிர்க்கட்சிகள் செயற்பட வேண்டாம். அரசியலில் மாற்று வழிகளை தேடி கொள்ளுங்கள்.
மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்ட மூலத்தில் மின் கட்டணம் அதிக்கும் என நாடாளுமன்றத்தில் பல நிபுணர்கள் பேசினர். அது தொடர்பான தரவுகளை தவறாக சமர்ப்பித்தனர்.
மின்சார சபையில் பல பில்லியன் கடன்கள் செலுத்த வேண்டியிருந்து. அவற்றை செலுத்துவதோடு சபையின் மறுசீரமைப்புக்கு சென்றோம். நாம் கட்டாயம் மின் கட்டணத்தை குறைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 19 மணி நேரம் முன்

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
