பசிலிடம் இருந்து ஜனாதிபதிக்கு சென்ற செய்தி! கோட்டாபயவை தொடர்புகொண்ட ரணில்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்பி வருவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரை தொடர்புக்கொண்டுள்ளார்.
பசில் விடுத்த கோரிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போது,விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்சவை தொடர்புக்கொண்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்காக வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு பசில் ராஜபக்ச, ஜனாதிபதியிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பும் திகதி இன்னும் உறுதியாகவில்லை

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகிய போதிலும் அவர் அதனை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இதனால், கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பும் தினம் இன்னும் உறுதியாகவில்லை.
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan