மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து
ஜனாதிபதி தேர்தலுக்கு எமது மொட்டு கட்சியிலிருந்து தகுதியான ஒருவரின் பெயர் குறிப்பிடப்படும். அது குறித்து தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், ஜனாதிபதியாக வேட்பாளராக ஒருவரை தெரிவு செய்தற்கு முன், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் எவ்வாறான வேலைத் திட்டங்களை செய்திருக்கின்றார் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தற்போதைய நிலை
நாடு தற்போது ஓரளவுக்கு முன்னேற்றமடைந்து வருகின்றது. ஜனாதிபதி என்ற பதவிக்கு முழு அனுபவம் கொண்ட ஒருவரே தேவை. தற்போதைய நிலை குறித்தும், எதிர்கால நாட்டின் நிலை பற்றியும் சந்தித்துச் செயற்பட வேண்டும்.
மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில், தாம் முடிவொன்றை எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போட்டியிட அனைவருக்கும் ஆசை உள்ளது எனினும், ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்படும் நபரொருவர், எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்? பொறுப்புக்களை பொறுப்பேற்றுள்ளாரா? அவற்றை சரியாக நிறைவேற்றியிருக்கிறாரா? அவருக்கு முன் அனுபவம் இருக்கிறதா? என்பது குறித்து ஆராய்ந்தே தீர்மானிக்க வேண்டும் என சமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam