லண்டனில் பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் கிரியையில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , லண்டனில் உள்ள பௌத்த விகாரைக்கு நேற்று பிற்பகல் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் பிரதம சங்கநாயக்கர் கலாநிதி போகொட சீலவிமல தேரரை சந்தித்த ஜனாதிபதி , அவரின் நலம் விசாரித்ததோடு, சுமூக கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினார்.
இதன்போது ஜனாதிபதிக்காக மத வழிபாடு நடத்தப்பட்டு ஆசி வழங்கப்பட்டதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.