ஜனாதிபதி அநுரவுக்கு காத்திருக்கும் ஆபத்து - சிரேஷ்ட ஊடகவியலாளர் எச்சரிக்கை
இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்தகால ஆட்சியின் போது பாரிய குற்றங்களை இழந்த கும்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு, கொலைக்கார கும்பல்களால் ஆபத்து ஏற்படலாம் என சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.
அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொலையாளிகளால் ஆபத்து
தாஜுடீன், பிரகீத் எக்னெலிகொட போன்ற சம்பவங்களால் சிக்கித் தவிக்கும் நபர்களால் எதையும் செய்ய முடியும் என தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதிக்கு ஆபத்து என்று சமூக வலைத்தளத்தில் ஏன் கூறியிருந்தீர்கள்?...” என சுனந்த தேசப்பிரியவிடம் ஊடவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்தவர், நிச்சயமாக ஆபத்துக்கள் இருக்க கூடும். ஒரு முன்னுதாரண மாற்றம் மேற்கொள்ளும் சூழ்நிலைகளில் இதுபோன்ற ஆபத்துகள் உள்ளன.
உயரடுக்கினரிடமிருந்து அதிகாரம் பறிக்கப்படும்போது இத்தகைய ஆபத்துகள் எழுகின்றன. பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டதை நாம் அறிவோம். அத்தகைய ஸ்னைப்பரைப் பயன்படுத்துவது கடினம் அல்ல.
ஆயுதப் படை
இன்று பாதாள உலகம் ஒரு ஆயுதப் படை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 2 கோடி ரூபாய் கொடுத்து நாட்டை விட்டு வெளியேற டிக்கெட் ஒன்றை எடுத்து கொடுத்தால் எதையும் சாதிக்கலாம்.

இன்றைக்கு அரசியல் என்பது செல்வம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது. எங்களுடன் தேனீர் அருந்திக் கொண்டிருந்தவர்கள் அரசியல்வாதிகள் ஆனார்கள், ஆனால் நாங்கள் சென்று பார்த்தபோது, வித்தியாசம் தெளிவாகத் தெரிந்தது.
அவர்களின் வீடுகள் அரண்மனைகள் போன்றவை. எனவே, நாம் முன்னர் கலந்துரையாடிய தாஜுதீன் பிரகித் எக்னலிகொட போன்ற சம்பவங்களால் சிக்கித் தவிக்கும் நபர்களால் எதையும் செய்யத் தூண்டப்படலாம்.
அந்த ஆபத்து நிச்சயம் உண்டு. சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri