ஜனாதிபதியும் ராஜபக்சவினரும:கரைசேர்ந்தனர்:மக்கள் ஆற்றில் தள்ளப்பட்டுள்ளனர்-சஜித் பிரேமதாச
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்த நாட்களில் நாடும் மக்களும் கயிற்று பாலத்தை பிடித்து கரை சேர வேண்டும் எனக் கூறினாலும் ஜனதிபதியும் ராஜபக்சவினரும் அவர்களின் நண்பர்களும் அந்த கயிற்று பாலத்தில் ஏறி கரைசேர்ந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் ஆற்றில் தள்ளப்பட்டுள்ளனர்

புத்தல பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடும், மக்களும் கயிற்று பாலத்தை பிடித்து ஆற்றை கடந்து கரைசேர வேண்டும் என ஜனாதிபதி கூறினார், ஆனால் 220 லட்சமான முழு நாட்டு மக்களும் கயிற்று பாலத்தில் இருந்து ஆற்றில் தள்ளப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதியும் ராஜபக்சவினரும் அவர்களின் நண்பர்களும் கயிற்று பாலத்தை பிடித்து கரைசேர்ந்துள்ளனர்.
மக்களுக்கு எதிரானவர்களுக்கு வரலாற்றில் ஏற்பட்ட நிலைமை

ஜனாதிபதி தற்போது நகைச்சுவையாக மாறியுள்ளார். அத்துடன் அரசாங்கத்திற்கு தந்திரம் உள்ளது. மக்களுக்கு எதிரானவர்களுக்கு கெடுதியான பிரதிபலன்களை ஏற்பட்டுள்ளது என்பதை வரலாற்றை நோக்கும் போது அறிந்துக்கொள்ள முடியும்.
நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் புதிய மக்கள் ஆணை அவசியம். இதனால், கூடிய விரைவில் தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோருவதாகவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri