IMF உடன்படிக்கையில் சாம்பியாவுக்கு ஏற்பட்ட நிலைமையே இலங்கைக்கு! அவுஸ்திரேலிய போராசிரியர் விடுக்கும் எச்சரிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய அறிக்கையின் படி எமது பொருளாதாரக் கட்டமைப்பில் (Economic Structure)) ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும்.
அந்த மாற்றம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதால் (back-to-back IMF loans) மீண்டும் ஒரு IMF உடன்படிக்கைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கைக்கான கிராஃபோர்ட் (Crawford School of Public Policy) ) கல்லூரியின் பொருளாதாரத் துறையின் தகைசார் பேராசிரியர் பிரேமச்சந்திர அதுகோரல தெரிவித்துள்ளார்.
சூம் தொழில்நுட்பத்தில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.தொடருந்து கருத்து தெரிவித்த அவர்,
சாம்பியாவில் ஏற்பட்டிருக்கும் நிலைமை
இவ்வாறானதொரு நிலைமைதான் சாம்பியாவிலும் (Zambia) ஏற்பட்டது. நமக்கு ஒரு வருடத்திற்கு முன்னர்தான் சாம்பியா IMF உடன்படிக்கைக்குள் நுழைந்தது.
அவர்களின் உடன்படிக்கை மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இப்போது நமது நாட்டைப் போன்ற ஒரு நிலைமை அங்கு காணப்படுவதால் சாம்பியா தற்போது இரண்டாவது IMF உடன்படிக்கைக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இலங்கைக்கும் அத்தகையதொரு நிலைமை ஏற்படலாம் என்பதை இந்த அறிக்கை மறைமுகமாகக் கூறுகிறது. ஆனால் நமக்கு அப்படி நடக்கக் கூடாது என்று நான் உண்மையாகப் பிரார்த்திக்கிறேன்.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலையின்படி அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை விட இத்தகைய 'பேக்-டு-பேக்' (Back-to-Back) உடன்படிக்கைக்குச் செல்வதே நல்லது.
அப்போது IMF இன் வட்டி விகிதம் சுமார் 4.5 வீதமாக ஆக இருக்கும். அத்துடன் நாம் சரியான பொருளாதாரக் கொள்கைகளை முன்னோக்கிக் கொண்டு செல்கிறோம் என்பதற்கான ஒரு 'நடத்தை சான்றிதழையும்' (Character Certificate) ) அவர்கள் நமக்கு வழங்குவார்கள்.
வெளிநாட்டு கையிருப்பு
சமீபத்திய IMF அறிக்கையில் ஒரு முக்கியமான விடயம் ஒன்று கூறப்பட்டுள்ளது. மத்திய வங்கி அறிக்கையின்படி தற்போது நமது வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உள்ளது.
ஆனால் அதிலிருந்து சீனாவால் நமக்கு வழங்கப்பட்டுள்ள தொகையை நீக்கினால் உண்மையில் தற்போது நம்மிடம் இருப்பது 5.4 பில்லியன் டொலர் மட்டுமே.
இது 2027 ஆம் ஆண்டாகும் போது நம்மிடம் குறைந்தபட்சம் 11.5 பில்லியன் அல்லது 12 பில்லியன் டொலர்கள் இருக்க வேண்டும் என (கூறுகிறது.

2027 இல் நம்மிடம் 13 பில்லியன் டொலர் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலவரப்படி இந்த இருப்புகளைச் சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.
எனவே இதற்குள்ள ஒரே மாற்று வழி வழமைபோல மீண்டும் ஒரு கடன் திட்ட உடன்படிக்கைக்குச் செல்வதாகும். இது IMF உடனான நமது 17 ஆவது கடன் திட்டமாகும்.
நாம் அவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி அவர்களின் நிபந்தனைகளை மீறாமல் சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு அங்கத்துவ நாடு என்ற வகையில் பயணித்து ஒரு குறிப்பிட்டளவிலான ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம்.
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri