இலங்கைக்கு பெருமளவு டொலர்களை ஈட்டித் தந்த இறால் : ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
இந்நாட்டிற்கு அதிகளவு அன்னியச் செலாவணியை ஈட்டித்தந்த இறால் வியாபாரம் தற்போது வீழ்ச்சியடைந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இறால் வியாபாரம் தற்போது மன்னார், மட்டக்களப்பு, தங்காலை பிரதேசங்களிலும் பரவியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இறால் உற்பத்தி
அதன்படி, தற்போது செயல்பாட்டில் உள்ள இறால் குளங்களின் எண்ணிக்கை சுமார் 27,000 ஆகும். இறால் தொழிலை நம்பி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் குளங்களில் இறால் வியாபாரத்தின் முக்கிய இலக்கு வெளிநாட்டு சந்தையாகும். அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 11,000 மெட்ரிக் டன் இறால் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாட்டு சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், இறால் தொழில் 18 சதவீதமாக குறைந்துள்ளதாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam