முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு
முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான 20 கோடி ரூபா பெறுமதியான காணிக்கு, போலியான ஆவணங்கள் தயாரித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ராஜாங்க அ மைச்சர் பிரசன்ன உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பிரசன்ன ரணவீரவுடன் ஏனைய மூன்று பேருக்கும் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி வரையில் இந்த நான்கு பேரினதும் விளக்க மறியலை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மஹர பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது.
நேற்று சந்தேகநபர்கள் நேரில் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகாத நிலையில், நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலமாக வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்குடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட சிலருக்கு நிதிமன்றம் ஏற்கனவே பிணை வழங்கியிருந்தது.





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
