ஐக்கிய நாடுகளில் இலங்கையருக்கு கிடைத்த உயர் பதவி
ஐக்கிய நாடுகளின் (united nation) மூலதன நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளராக கலாநிதி பிரதீப் குருகுலசூரிய (Pradeep Gurukulsuriya) நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
கலாநிதி பிரதீப் குருகுலசூரிய (Pradeep Gurukulsuriya) 2006 இல் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றார்.
அத்துடன் அவர் உலக வங்கியுடன் (World Bank) இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினார்.
இயற்கை, காலநிலை மற்றும் எரிசக்தி நிதி
இலங்கையின் பொருளாதார நிபுணர் குருகுலசூரிய அமெரிக்காவின் (United state of america) யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஐக்கிய நாடுகளின் (UN) மூலதன நிதியத்தில் இணைவதற்கு முன், கலாநிதி குருகுலசூரிய, சுற்றுச்சூழல் நிதிக்கான ஐக்கிய நாடுகளின் (UN) மேம்பாட்டு நிதியத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
அங்கு அவர் 140 நாடுகளில் இயற்கை, காலநிலை மற்றும் எரிசக்தி நிதியை மேற்பார்வையிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
