ஐரோப்பிய நாடுகளை போன்று இலங்கையிலும் அமுலாகவுள்ள நடைமுறை
கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளில் அமுலிலுள்ள நடைமுறைகளை இலங்கையிலும் செயற்படுத்த அரசாங்கம் சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அற்கமைய இலங்கையில் மூன்றாவது கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதற்கான சட்டத்தன்மை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டிருப்பதாக, சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் இதே போன்று அபாரதம் விதிக்கும் நடைமுறை அமுலிலுள்ள உள்ளது. இதன் காரணமாக வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.