விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்தார் - பின்னர் மறைந்தார்: ரணிலின் பதில்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்றொரு தலைவர் இருந்தார் என்பதும் உண்மை, அவர் மறைந்தார் என்பதும் உண்மை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வெளிப்படுவார் என தமிழ்த் தேசிய பேரியகத்தின் தலைவர் பழ.நெடுமாறன் அண்மையில் தெரிவித்தமை தொடர்பில் ஊடகமொன்றிட்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம்

அவர் மேலும் கூறுகையில், பிரபாகரன் குறித்த ஓர் இனத்தின் அதாவது தமிழினத்தின் உரிமைக்காகப் பயங்கரவாத வழியில் போராடியதால் அவருக்கு எதிராக இலங்கை அரசாங்கமும் அதன் படைகளும் போரிட்டன.
இதைவிட மேலதிக கருத்து எதனையும் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening