ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவதே மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது இன்று(28.6.2026) ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
கடலுக்கு அடியில் 41 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஹச்சினோஹே நகரம் மற்றும் புடாய் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக உணரப்பட்டன.
ஜப்பானின் நில அதிர்வு அளவுகோலில் இது 'நெகட்டிவ் 5' ஆகப் பதிவாகியுள்ளது. டோக்கியோ உள்ளிட்ட சுற்றியுள்ள பல பகுதிகளிலும் லேசான அதிர்வுகள் அறியப்பட்டன.
எச்சரிக்கை
கடந்த ஜூன் 25 அன்று இதே இவதே கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவில் 6+ என்ற மிகத் தீவிரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் பாறைச் சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri