உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப் போராட்டத்திற்கு அநுரவே பொறுப்பு
உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது நிலவும் அதிகாரப் போராட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்காவே பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளப் பதிவில்,
தற்போதுள்ள உள்ளூராட்சி சட்டம் குறைபாடுடையது என்பதை கடந்த தேர்தல்களின் போது உறுதிப்படுத்தப்பட்டதாக மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி
அதிக வாக்குகள் பெற்ற கட்சிகள் 50% குறைவான இடங்களைப் பெற்றாலும் மன்றங்களை அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறுவதாகவும், ஆனால் தற்போதைய சட்டத்தில் அத்தகைய ஏற்பாடு இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவும், வட்டார அடிப்படையிலான உறுப்பினர்களுக்கு வழி வகுக்கவும் நல்லெண்ணத்துடன் தற்போதைய சட்டம் கொண்டுவரப்பட்டது, ஆனால் தற்போதைய முறை தோல்வியடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
“கடந்த முறை இதை சோதித்த பிறகு எங்களுக்குத் தெரியும். ஆகையால், ஜே.வி.பி உட்பட அனைத்து கட்சிகளும் சட்டத்தை திருத்த முடிவு செய்தன.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்
இதன் மூலம் மொத்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8500 இலிருந்து சுமார் 5000 ஆக குறைப்பதற்கும், சில பிற பிரிவுகளையும் திருத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டது.
கடந்த தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக இதற்கு ஒப்புக்கொண்டன. அந்தக் குழுவில் ஜே.வி.பி உறுப்பினராக அநுர குமார திஸ்ஸநாயக்கவே இருந்தார்,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் கணேசன் குறிப்பிட்டார்.
இந்த சூழ்நிலையில், என்.பி.பி அரசாங்கம் தங்கள் 159 பெரும்பான்மையுடன், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் சட்டத்தைத் திருத்தியிருக்க முடியும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




