இன்று மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
மின்சார பாவனையை கட்டுப்படுத்தும் யோசனையை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
வீதி விளக்குகளை அணைக்கவும் அலுவலக மின்சார உபகரணங்களை கட்டுப்படுடன் வைப்பது தொடர்பில் முன்மொழியப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25ம் திகதிக்குள் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் செயற்படுத்தப்படாவிட்டால் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும், நாளையும் நாளை மறுதினமும் மின்வெட்டு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.