மின்வெட்டு இடைவெளி குறைகிறது! வெளியான அறிவிப்பு
எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், 17ஆம் திகதி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக PUCSL இன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் மின்வெட்டு பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
எதிர்வரும் 15 & 16 - குழுக்கள் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W - 1 மணிநேரம் மற்றும் இரவில் 20 நிமிடங்கள்.
அக்டோபர் 17 - குழுக்கள் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W - பகல் நேரத்தில் 1 மணிநேரம் மற்றும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் என மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதலாம் இணைப்பு
வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடைக்கான நேரத்தை குறைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்ற நிலையில், அனைத்து நீர் மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
CEB will reduce the power cuts during the weekend due to increase in hydro generation & low energy demand. If rain continues to the catchment areas, CEB will keep the power cuts to a minimum. However CEB will manage the water resources available for future power generation.
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 14, 2022
மின்சார உற்பத்தி அதிகரிப்பு
இதனால் மின்சார உற்பத்தியும் அதிகரித்துள்ளமையினால் வார இறுதி நாட்களில் மின்விநியோகத்தடைக்கான நேரத்தினை குறைக்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்விநியோகத்தை முகாமை செய்வதற்கு தற்போது நாளாந்தம் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், விக்டோரியா, ரன்தெனிகல, ரந்தபே, காஸில் ரீ மற்றும் ஏனைய மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் அண்மைய நாட்களில் அதிக மழைவீழ்ச்சி பெய்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார்.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவில் 77 சதவீதத்தை எட்டியுள்ளது எனவும், நீர் மின் உற்பத்தியிலிருந்து 50 சத வீதமான மின்சாரம் தேசிய கட்டமைப்பில் தற்போது இணைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam