கொழும்பில் மின்சாரம் துண்டிப்பு! அமைச்சரின் உடனடி நடவடிக்கை
கொழும்பில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த டுவிட்டர் பதிவில், கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
Power restored in all areas.
— Kanchana Wijesekera (@kanchana_wij) April 24, 2023
இன்று பிற்பகல் கொலன்னாவ துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
CEB has informed of a sudden power outage in several areas within Colombo 4, 5, 7, 8, 10, 12 areas & suburbs due to a Cable explosion & breakdown of the 132 KV substation at Kolonnawa.
— Kanchana Wijesekera (@kanchana_wij) April 24, 2023
Power restored to Colombo 4, 5 & 7.
முதலாம் இணைப்பு
கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலன்னாவ துணை மின் நிலையம் திடீரென பழுதடைந்ததால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் துண்டிப்பு
இதற்கமைய கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... யாரு பாருங்க, போட்டோ இதோ Cineulagam

Optical illusion: படத்தில் '39' களில் மறைநதிருக்கும் '89' ஐ '6' விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Manithan
