சென்னையிலிருந்து ஒட்சிசனுடன் இலங்கை திரும்பவுள்ள கடற்படை கப்பல்
நாற்பது தொன் திரவ மருத்துவ ஒட்சிசன் சென்னை துறைமுகத்தில், நங்கூரமிட்டுள்ள இலங்கை கடற்படை கப்பலான ‘சக்தி’யில் ஏற்றப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்படும் என்று இந்திய உயர்ஸ்தானிகரம் ட்வீட் செய்துள்ளது.
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஒட்சிசனை கொண்டு வருவதற்காக இலங்கை கடந்த திங்கட்கிழமை, இந்த கப்பலை சென்னைக்கு அனுப்பியது.
இலங்கையில்,கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளதால் அதனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.