உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைப்பு: ஜே.வி.பி எதிர்ப்பு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய காலப்பகுதிக்குள் நடத்துமாறு ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா (Rilwin Silva) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளாட்சிசபைகளின் செயற்பாட்டுக்கு மக்கள் நான்காண்டுகளே ஆணை வழங்கினர். தற்போது மக்கள் ஆணையை மீறும் வகையில் பதவிக் காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோத செயலாகும்.
இந்த நடவடிக்கையை அரசு மீளப்பெறவேண்டும். உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.