அமெரிக்க - சீன - இந்திய மரணப்பொறியில் இலங்கை மக்கள்: வவுனியாவில் சுவரொட்டிகள்
வவுனியாவில் பல்வேறு இடங்களில் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சுவரொட்டிகளில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான வாக்கியங்களைத் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது.
அச் சுவரொட்டிகளில் மின்சாரம் எண்ணெய் சுயாதிபத்தியத்தைக் காட்டிக்கொடுக்கும் திருட்டு ஒப்பந்தத்தை ரத்து செய், அமெரிக்க - சீன - இந்திய மரணப்பொறியில் மக்களைச் சிக்கவைக்கும் ஏகாதிபத்திய சார்பு ஆட்சிக்கு எதிராவோம் போன்ற வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த சுவரொட்டிகளுக்குத் தொழிலாளர் போராட்ட மத்திய
நிலையம் மற்றும் முன்னிலை சோஷலிஸக் கட்சி என்பன உரிமை கோரப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது .





