தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படலாம்! தேர்தல் ஆணைக்குழு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் இதுவரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கவில்லை.
அதன் காரணமாக இம்மாத இறுதியில் தபால் மூல வாக்களிப்பை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்கிழமை தபால் வாக்குச்சீட்டுகளை தொடர்புடைய வாக்களிப்பு நிலையங்களுக்கு வழங்கும் பொருட்டு தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்தது.
போதிய நிதி கிடைக்காத நிலைமை
எனினும் இது வரை அரச அச்சகத்தில் இருந்து தபால் வாக்குச்சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறவில்லை.
போதிய நிதி கிடைக்காத நிலைமையில் வாக்குச்சீட்டுகளை அச்சிட முடியாது என்று அரச அச்சக பணிப்பாளர் நாயகம் கங்கானி லியனகே நேற்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
