மன்னாரிலும் தபாலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்றும்(20) இடம் பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மாவட்ட தபாலக செயற்பாடுகள் முழுமையாக இடம் பெறவில்லை.
தபாலக சேவைய பெற வந்த பொது மக்களும் பல்வேறு இடைஞ்சலுக்கு உள்ளாகியமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த திங்கட்கிழை (18) மாலை தொடங்கிய வேலைநிறுத்தம் தொடர்ந்து மூன்றாவதது நாளாக இடம் பெற்றுவரும் நிலையில் தொடர்சியாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக தண்டப்பணம் செலுத்துதல், கொடுப்பனவுகள் பெறுதல், நீர் மின்சார கட்டணம் செலுத்துதல், பொதிகள் அனுப்பு சேவைகளை பெற வருகை தந்த பொதுமக்கள் தொடர்சியாக தங்களது சேவையை பெற முடியாத நிலை காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 20 மணி நேரம் முன்

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam

கல்கி படத்தில் தீபிகா படுகோனுக்கு பதிலாக இந்த நடிகை நடிக்கப்போகிறாரா? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் Cineulagam
